Monday, 31 October 2011

வரைகலை-2 கணினி வரைகலை குறித்த தரமான வலைப்பதிவுகள்


கணினி வரைகலையில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர் மதிப்பிற்குரிய திரு.ஜெ.வீரநாதன் அவர்களுக்கு, இந்திய மொழிகளில் கணினி வரைகலையின் பிரதான மென்பொருள்களான பேஜ்மேக்கர், போட்டோஷாப், கோரல்டிரா, இன்டிசைன், மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் ஆகிய அனைத்து மென்பொருள்களுக்கும் விரிவான விளக்கங்களுடன் புத்தகம் எழுதிய ஒரே ஆசிரியர் என்ற பெருமை உண்டு. இவரது கோரல்டிரா பற்றிய புத்தகமான சித்திரமும் மவுஸ் பழக்கம்தமிழக அரசின் விருது பெற்றது.

கோயம்புத்தூரில் பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் என்ற பெயரில் கணினி வரைகலைக்கான அனைத்து மென்பொருள்களுக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறார். தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் இவரிடம் ஏராளமானோர் கணினி வரைகலையில் பயிற்சி பெற்றுள்ளனர். இப்பயிலகம் கணினி வரைகலையின் சங்கமம் என்ற மாத இதழையும் நடத்தி வந்தது.

இப்பயிலகத்தின் வலைப்பதிவான சங்கமம் - பாலாஜி கணினி வரைகலைப் பயிலகத்திலிருந்துhttp://sangamamfrombicg.blogspot.com கணினி வரைகலை பற்றிய பதிவுகளையும், அப்பயிலகம் அளிக்கும் சிறப்பு பயிற்சிகள் பற்றிய பதிவுகளையும் உள்ளடக்கியது. பார்கோடுகள் பற்றிய சமீபத்திய பதிவு கணினி வரைகலைஞர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது. 


கணினி வரைகலைக்கு இப்பயிலகம் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் வரைகலைஞன் பெருமை கொள்கிறது.

http://sangamamfrombicg.blogspot.com






No comments:

Post a Comment